விச ஊசி தொடர்பான மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள்

259 0

can-720x480-450x300விச ஊசி விவகாரம் தொடர்பில் பத்தாவது வாரமாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இதுவரை 193 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளமையானது மருத்துவ பரிசோதனையில் ஆர்வம் காட்டாத தன்மையே காட்டுகிறது என வடமாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடமாகாண வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகின்றது.

அதன்படி பத்தாவது வாரமாக மருத்துவ பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருமாக மொத்தமாக 193 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் செப்டம்பர் 2ஆம் திகதி 26 பேரும், செப்டம்பர் 9ஆம் திகதி 47 பேரும், செப்டம்பர் 15ஆம் 16ஆம் திகதிகளில் 22 பேரும், செப்டம்பர் 23 ஆம் திகதி 30 பேரும்,

செப்டம்பர் 30 ஆம் திகதி 21 பேரும், ஒக்டோபர் 7ஆம் திகதி 15 பேரும், ஒக்டோபர் 14ஆம் திகதி 10 பேரும், ஒக்டோபர் 21ஆம் திகதி 14 பேரும், ஒக்டோபர் 28ஆம் திகதி 02 பேரும், இம் மாதம் 4ஆம் திகதி 06 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்தும் வெள்ளிக்கிழமைகளில் இம்மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்ற போதும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்பதில் முன்னாள் போராளிகள் பலரும் ஆர்வம் காட்டவில்லை.

இதேவேளை, புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான எஸ்.அமலதாஸ் (வயது 46) என்பவர் கடந்த மூன்றாம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.