யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகம் அமைக்க அமைச்சரவை அனுமதி!

269 0

foreign-ministry-sri-lankaவவுனியாவில் அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக பணியகத்தை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

வெளிவிவகார தூதரக அமைச்சின் சேவைகளை மக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக வவுனியாவிலும், மாத்தறையிலும் அமைப்பதற்கு முதலில் அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவான மக்கள் வெளிவிவகார சேவையின் தூதரக உதவியைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையிலிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, வவுனியாவில் அமைக்கப்படவிருந்த தூதரக சேவை பணியகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்திருந்தார்.

இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரமளித்தது.