திருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

239 0

திருகோணமலை- தம்பலகாமம், பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், தம்பலகாமம்-10ம் கொலனியைச் சேர்ந்த முகம்மட் றிபாஸ் (48வயது) என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.