வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்

222 0

வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ளார்.

இந்த போராட்டம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கிறிஸ்தவர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர்.

இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

குறிப்பாக கிறிஸ்தவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ்.ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகின்றோம் என  குறிப்பிட்டுள்ளார்.