இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7 மணி அளவில் இடம்பெற்றதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் வாழ்க்கை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான கெப்படிபொல பகுதியை சேர்ந்த அஜித்வீரசூரிய என்ற பொலிஸ் உத்தியோக்தரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்தின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தின் சாரதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைபடுத்தபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.