இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மாத்தறையில் கைது!

221 0

கேரள கஞ்சா தொகையொன்றை வைத்திருந்த இங்கிலாந்து பிரஜை ஒருவரும் மற்றும் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு 9.30 மணிக்கு இந்த வௌிநாட்டுவர்கள் இருவரும் மாத்தறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இங்கிலாந்து பிரஜை மாத்தறை, பொல்ஹேன கடற்கரை வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இருந்து 02 கிராம் 500 மில்லிகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை, மடிஹ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் 7 கிராம் 200 கிராம் கேரள கஞ்சாவை தன்னகத்தே வைத்திருந்த அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 23 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (21) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.