சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

253 0
துபாயில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாட்டு சிகரெட் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் எனவும் அவர் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (20) அதிகாலை 4.55 மணிக்கு துபாயில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்-226 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.

அவரால் இரண்டு பயணப் பொதிகளில் குறித்த சிகரெட் தொகை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது, 11 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 22 ஆயிரத்து 760 சிகரெட் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பயணிக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.