ஆவாகுழுவினர் என சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுக்கு விளக்கமறியல்!

312 0

201608250915539530_engineering-college-student-murder-life-sentence-for-4_secvpfயாழ்ப்பாணத்தை கிலியில் ஆழ்த்தியுள்ள ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்ய கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவலிங்கம் கமல்நாதன், அலெக்ஸ் அரவிந்தன் மற்றும் கெங்காதரன் பிருந்தாபன் ஆகியோர் கடந்த வார இறுதியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட குழுவினரால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் கொழும்புக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவர்களைவிட, சென்ற வாரம் கைதுசெய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.