சீனாவுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன !

265 0

சீனாவுக்கான சேவைகளை மட்டுப்படுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள காரணத்தினால் கொழும்பில் இருந்து சீனாவுக்கு அதாவது மூன்று நகரங்களுக்கான விமான சேவைகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பீஜிங், ஷங்காய் மற்றும் கென்டன் நகரங்களுக்கான விமான சேவைகளை, நாளை முதல் (வியாழக்கிழமை) மார்ச் 28 வரை மட்டுப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பீஜிங்கிற்கான வாராந்ந்த விமான சேவைகளிகளின் எண்ணிக்கை 4 இலிருந்து 2 ஆகவும், ஷங்காய்க்கான சேவைகள் 4 இலிருந்து 2 ஆகவும், கென்டனுக்கான சேவைகள் 7 இலிருந்து 3 ஆகவும் குறைக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவுக்கான விமான சேவைகளை மட்டுப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.