இலங்கை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியம் இந்த மாதம் மூன்றாம் வாரம் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கடன் நீடிப்பு குறித்த மீளாய்வுக்காக இந்த கூட்டம் வொசிங்கடனில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பில் மீளாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.