குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

260 0
பண்டாரகம, பொல்கொட குளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 3 ஆம் திகதி இரவு காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பண்டாரகம, அளுத்கம பகுதியை சேர்ந்த 70 வயதுடைய கருணாவதி எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்