நாட்டில் வலுவான அரசாங்கமொன்றை உருவாக்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்புகின்றாரென நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதியை ஆதரிப்பது அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பு எனவும் வீரகுமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்கி தற்போதைய அரசாங்கத்தை மேலும் வலுவடைய செய்வதற்கு உதவ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.