இழந்த தமிழ்- முஸ்லிம் வாக்குகளை பெறுவதே எமது அடுத்த இலக்கு – திசாநாயக்க

206 0

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் இழந்த வாக்குகளை பெற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் பிரதேசங்களின் வாக்குகளையும் பெற்று , வெற்றியடைந்து சிறந்ததொரு ஆட்சியை செய்யவே விரும்புகின்றோம் எனவும்  எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த முறை ஹங்குரன்கேத பகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.