கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 3355 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பகுதியில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 மில்லி கிராம் ஹேரோயினுடன் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை, பகமுன, லக்கல, ஹத்தொடஅமுன ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை நகரில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.