நீரில் மூழ்கி இளைஞன் பலி!

221 0

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதிவுல் வாவியில் நீராட சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீட்கப்பட்டு மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

29 வயதுடைய எடவீரகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.