நாகர்கோவில் சிறுவர்கள் மூவரும் பத்திரமாக மீட்பு!

217 0

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில்ப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் நேற்றிரவு 6.30 மணியளவிலிருந்து காணாமற்போனதையடுத்து அந்தக் கிராமத்தில் பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்படுகிறது.

கலியுகமூர்த்தி மதுசன் ( வயது-10), புஸ்பகுமார் செல்வகுமார் (வயது-10) ஆகிய இருவருடன் சந்தியோ தனுசன் ( வயது-17) மனநலம் குன்றியவரும் காணாமற்போயிருந்தனர்.

இந்த நிலையில் ஊர் மக்கள் திரண்டு இரவோடு இரவாக சிறுவர்கள் மூவரையும் தேடினர். பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களும் விசாரணை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சிறுவர்கள் மூவரும் ஆலயம் ஒன்றின் மண்டபத்தில் உறக்கத்திலிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டனர்.