மூன்றரைக் கோடி பணத்தினை கொள்ளையிட்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது!

300 0

17733_arrested300புறக்கோட்டை பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில், கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் உபபொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது அனுராதப்புரம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த, சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் உபபொலிஸ் அத்தியட்சகரே பிரதான சந்தேகநபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நகை கடையிலிருந்து ரூபா 35 மில்லியன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், அனுராதப்புரம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.