வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக சலுகை காலம் நீடிப்பு

191 0

மேல் மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேல் மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய 31.05.2020 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் ஏற்கனவே உள்ள வாகனங்களுக்கு மட்டும் இந்த அனுகூலம் வழங்கப்படும் என மேல் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை 011-2436415, 011-232728, 011-2432505 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.