சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவை – (காணொளி)

321 0

new-picture-3சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

சர்வோதயத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையில் காலடி பாதிக்கும் நிகழ்வினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட தேசோதய சபையும் மட்டக்களப்பு பிராந்திய சர்வோதயமும் இனைந்து மட்டக்களப்பு மாவட்ட தேசோதய தலைவரும், மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய பிரதி அதிபருமான எம் .பகிரதன் ஒழுங்கமைப்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வாக சர்வோதய பிராந்திய வளாகத்தில் சிரமதான பணிகளும் தொடர்ந்து “ உதிரம் வழங்கி உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் வகையில் சர்வோதய பிராந்திய வள வளாகத்தில் 85 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண விவசாய இகால்நடை அமைச்சர் கே .துரைராஜசிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார் .

இதேவேளை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன, மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் , மாகாண சர்வோதய இணைப்பாளர் இ .சி .எ . கரீம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் நளின் மற்றும் மட்டக்களப்பு – அம்பாறை சர்வோதய அங்கத்தவர்கள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்