ஐ.நா குழு அமர்வுகளில் சட்ட மா அதிபர் தலைமையிலான குழு பங்கேற்பு

316 0

53628சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் அமர்வுகளில் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று பங்கேற்க உள்ளது. இலங்கைக்கு எதிரான சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அமர்வுகளில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சட்ட மா அதிபர் தலைமையிலான பிரதிநிதிகள் பதிலளிக்க உள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் எதிர்வரும் 7ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரையில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.