அத்துருகிரிய – புறக்கோட்டைக்கிடையில் ஈடுபடும் 170 ஆம் இலக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டடுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை இராஜகிரிய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் தனியார் பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.
இதனால் அப்பகுதிக்கான பஸ் சேவைகள் தாமதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.