அங்கவீனமுற்ற படைவீரர்களை சந்தித்தார் மகிந்த

313 0

20sri-lanka-shekhar-yadav05_660_020813082441தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்காமை காரணமாகவே இவர்கள் இவ்வாறு உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த படைவீரர்கள் இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து, தங்கள் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும்,இன்றைய தினம் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, ஓய்வூதியம் தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.