இலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- ரணில் விக்ரமசிங்க

316 0

ranil-wickramasinghe_ciஇலங்கையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலவச வைபை வலயங்களை உருவாக்குதல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி கொள்வனவு செய்ய சலுகைக் கடன் வழங்குதல், உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணனி;கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 13 ஆண்டுகள் பாடசாலை கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் அறிவார்ந்த சமூகமொன்றை கட்டியெழுப்ப இலங்கைக்குள் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.