ராஜிதவின் குற்றச்சாட்டு குறித்து ஜனாதிபதியிடம் கேட்கவும் – கோதபாய

319 0

gotabaya_ciசுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்னவின் குற்றச்சாட்டு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்குமாறு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஹாவா குழுவினை தாமே இயக்கியதாக சுமத்திய குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அதனை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி. மற்றும் புளொட் போன்ற அமைப்புக்களின் ஆயுதங்களை தாமே களைந்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன, படைவீரர்களுக்கு எதிராக சுமத்திய மிகப் பெரிய குற்றச்சாட்டு இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரே பதிலளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.