யுத்த செய்தியை அறிக்கையிட வடக்கிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்!!

297 0

japura-uni-626x380யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் நூலக மற்றும் தொடர்பாடல் டிப்ளோமா கற்கைநெறி பயிலும் 60 மாணவ மாணவியரே இன்று வடக்கிற்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் நடைமுறை ரீதியான அனுபவங்களையும், தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இம்மாணவர்கள் வடக்கிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் தொடர்பாடல் பீடத்தின் பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கற்கை நெறியின் யுத்த செய்தி அறிக்கையிடல் விரிவுரையாளர் மேஜர் திலக் சேனாநாயக்க உள்ளிட்டவர்களும் இந்த சுற்றுப் பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.