யாழ்ப்பாணத்தில் கஞ்சா

299 0

kanchaaயாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட நிலையில் இது மீட்கப்பட்டதாக காங்கேசன்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போது அவர் கைதானார்.

அவரிடம் இருந்து 52 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பெறுமதி 91 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.