யாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளது

255 0

jaffna_minicipal_councilயாழ். மாநகரசபையில் 17 லட்சம் ரூபாய் பணம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது,யாழ். மாநகரசபையின் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண் பணியாளரினால் ரூபா 17 இலட்சம் பணம் மோசடி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் திட்டமிடல் கிளையின் கீழ் புதிய கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு அனுமதிகளிற்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிர்வாக ரீதியில் இருப்பு கணக்கிடப்பட்ட போது 17லட்சம் ரூபாய் ஊழல் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்ட சிரேஷ்ட பெண் உத்தியோகத்தர், ஓர் முக்கிய அதிகாரியின் நெருங்கிய உறவினர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மேலதிகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.