லசந்த கொலை – உரிமை கோரியவரின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!

283 0

ovtlcwdசன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன் என்று உரிமை கோரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியின் சடலம் நேற்று (02) கேகாலை பொது மயானத்தில் மீண்டும் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியின் சடலம், கடந்த மாதம் 19 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

இதேவேளை தோண்டி எடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியின் இரண்டாவது பிரேத பரிசோதனை கேகாலை மருத்துவமனையில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித் தென்னக்கோன் தலைமையில் மூன்றுபேர் இணைந்த குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த அதிகாரியின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரியின் தற்கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.