அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி வெல்வார் என மூடிஸ் கணிப்பு

281 0

201611030506170791_moodys-analytics-election-model-predicts-clinton-win_secvpfஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிலாரி வெல்வார் என ”மூடிஸ்” கணித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வருகிற செவ்வாய்க் கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (68) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் 18 வயதானவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அங்கு 21 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் பேர் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள். எனினும் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போட பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு வாக்குப்பதிவு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. தேர்தலுக்கு முன்பாகவே ஓட்டு போடும் சிறப்பு வசதி அங்கு செய்து தரப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு புளோரிடா மாகாணத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கலந்து கொண்ட பிரசார கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த மாகாணத்தின் முன்னாள் கவர்னர் சார்லி கிறிஸ்ட் பேசும்போது, யாரெல்லாம் ஏற்கனவே ஓட்டு போட்டு விட்டீர்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது பெரும்பாலான பார்வையாளர்கள் தங்கள் கைகளை உயர்த்தினர்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டு விட்டனர் என்ற தகவல் வெளியானது.முக்கிய மாகாணமான புளோரிடாவில் மட்டுமே 40 லட்சம் பேர் ஓட்டு போட்டு விட்டனர்.

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முக்கிய மாகாணங்களில் மொத்த வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முதல் பாதிப்பேர் வரை தங்கள் ஓட்டை ஏற்கனவே செலுத்தி விடுவர் என தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 12 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில்,  இந்த தேர்தலில் இதுவரை 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டு போட்டிருப்பது, இந்த தேர்தலில் வாக்காளர்களிடையே முன்கூட்டியே ஓட்டு போடுவதில் ஆர்வம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.

சான்போர்டு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஹிலாரி கிளிண்டன், முன்கூட்டியே ஓட்டு போடுவது வசதியானது என கூறினார். அவர் எப்போதும் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு ஆதரவு தெரிவித்து வருபவர் ஆவார். இவர் முன்கூட்டியே ஓட்டு போடுவதற்கு மக்களை தயார் செய்து அனுப்புவதற்கு என்று ஒரு மாபெரும் குழுவை வைத்துள்ளார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற வர்த்தக, நிதி சேவை நிறுவனமான மூடிஸ் கார்ப்பரேஷனின் அங்கமான ”மூடிஸ் அனாலிடிக்ஸ்” கணித்துள்ளது.

இந்த தேர்தலில் எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பொறுத்தமட்டில் ஹிலாரிக்கு 332 ஓட்டுகளும், டிரம்புக்கு 206 ஓட்டுகளும் கிடைக்கும் என இந்த அமைப்பு கணித்திருக்கிறது.

இதேபோன்ற ராயிட்டர்ஸ், இப்சோஸ் கருத்துக்கணிப்பும் ஹிலாரி குறைந்தபட்சம் 278 எலெக்டோரல் கல்லூரி ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுவார் என கணித்துள்ளது.