ஐரோப்பிய நாடாளுமன்ற குழு – கிழக்கு முதல்வர் சந்திப்பு

330 0

eastern-cm-nazeer-ahamedஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம் திருமணச்சட்டம் தொடர்பான நிபந்தனைகள் நீக்கப்படவேண்டு மென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினரிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தனிப்பட்ட சமூகத்தின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்களை நிபந்தனைகளாக முன்வைப்பதை தவிர்த்து இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை நிபந்தனைகளாக முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துத்தல் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.