தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்கள்!

230 0

இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல்  கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தல்கள் கண்காணிப்பு குழுவானது மொத்தமாக 71 நுண் கமராக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது குறித்த கமராக்கள் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள், மோசடிகள் மற்றும் ஏனைய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.