கஞ்சா மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

307 0

1545116569ganjaகஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் றத்கம, கம்மெத்தகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றத்கம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்கைது இடம்பெற்றதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு சிகரட்டுக்கள் 27உம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

றத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.