இலங்கைப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் – பாகிஸ்தானியருக்கு சிறை

322 0

11இலங்கை பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாகிஸ்தானியருக்கு டுபாய் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

டுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் டுபாய் பொலிஸ் நிலையத்தில் பாலியல் ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாக பாகிஸ்தானியர் ஒருவர் மீது முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாகிஸ்தானியர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து டுபாய் நீதிமன்றம் குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் தண்டனைக் காலத்தின் பின்னர் குறித்த பாகிஸ்தானியரை நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.