படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

339 0

dscn2536தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும் 24 வயதுடைய பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவருக்கும் நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நேற்று 29.10.2016 அன்று கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இவ் நிகழ்வில் குளிரினையும் பொருட்படுத்தாது கலந்துகொண்ட மக்கள் இவ்விரு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான இப்படுகொலை தொடரும் சிங்கள பேரினவாத அரசின் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலை எண்ணத்தையே வெளிப்படுத்துகின்றது என்று தெரிவித்ததோடு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் Frankfurt பல்கலைக் கழகத்தில் தாயகத்தில் மாணவர்கள் மீதான இப்படுகொலை தொடர்பான தகவல்கள் இளையோர்களால் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

dscn2518 dscn2523 dscn2531 dscn2536 dscn2540 uni3