வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது -யாழில் சம்பவம்-

371 0

images-3யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வாளை வைத்துக் கொண்டு சுத்தித்திரிந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று இருவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் இன்று இரவு பொலிஸார் வழமை போன்று வீதிச் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வீதியால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் சென்றதை அவதானித்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிலில் சென்றவர்களை வழிமறித்துள்ளனர்.
அவர்களை மறித்த பொலிஸார் மோட்டார் சைக்கிலில் தோடுதல் நடத்திய போது, அதற்குள் இரு வாள் மறைத்து வந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இரு வாளையும் மீட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்த இரு இளைஞர்களையும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.