துப்பாக்கியால் மிரட்டிய ஹம்பாந்தோட்டை நகர மேயருக்கு பிணை

250 0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி கைதுசெய்யப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னாண்டோ பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் இன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்து மிரட்டியுள்ள நிலையில், பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.