ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறினார் ரணில்

232 0

ரணில் விக்ரமசிங்க அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (23) காலை ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் சுமார் 1 மணி நேரம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தனது வாக்குமூலத்தை வழங்கிய நிலையில் பிரதமர் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த 18 ஆம் திகதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதால் தனக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.