இந்திய பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
ஹெரோயின் போதை பொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை, தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் ஒரு கிலோ மற்றும் 400 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று (22) அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்கமைய குறித்த இந்திய பிரஜைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.