புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இராணுவ வீரர் தற்கொலை

229 0

வெலிகந்த பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையாகியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவர் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று (22) மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த இராணுவ வீரர் தனக்கு வழங்கப்பட்ட ரி56 ரக உத்தியோகப்பூர்வ துப்பாக்கியை பயன்படுத்தி அவர் கடமையில் ஈடுபட்டிருந்த சோதனை சாவடிக்கு உள்ளேயே தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

மதுசான் பிரேமகுமார என்ற 19 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.