உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

236 0
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்றதைப் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவை தொடர்பான பரிந்துரைகள் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய பரிந்துரைகள் ஏறத்தாழ 200 பக்கங்களைக் கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.