தெற்கு அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

231 0

தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொடை நுழைவாயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக வீதியின் 30ஆவது மைல் கல் அருகே வீதி சீர்த்திருத்த பணிகளில் ஈடுபட்டிந்த தொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிற்றூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.