கண்ணீர் அஞ்சலி ஒட்டியவர் மின் தாக்கி பலி

208 0

இரத்தினபுரி – பலங்கொடை பகுதியில் கண்ணீர் அஞ்சலி பதாகையை காட்சிபடுத்த முற்பட்ட நபர் மின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலங்கொடை நகரத்தில் மக்கள் வங்கிக்கு அருகில் நேற்று மாலை இவர் மின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலங்கொடை – பெலிஹூல்வோய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய டி. நாகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது உயிரிழந்த நபர் கண்ணீர் அஞ்சலி பதாகை ஒன்றை காட்சி படுத்த முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த பதாகை அதிபலம் வாய்ந்த மின்கம்பியில் சிக்குண்டுள்ளது. பின்னர் மின்தாக்குதலுக்குள்ளான நபர் பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.