3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

225 0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நேற்று வெளியிட்ட எச்சரிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் எனவே குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை அறிகுறிகள் காணப்பட்டால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராஜாங்கணை, அங்கமுவா, தப்போவா, குக்குலே கங்கை நீர்த்தேக்கங்கள் மற்றும் குருணாகலை மாவட்டத்தில் உள்ள தெதுரு ஓயா நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முதல் மழைவீழ்ச்சி குறைவடைந்து இருப்பினும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.