கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

202 0

வெயாங்கொட – கும்பல்ஒலுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததன் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.