விபத்தில் கணவன் மற்றும் மனைவி பலி

222 0
குருணாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியின் புளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் அவரது மனைவி குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 25 வயது கணவன் மற்றும் அவருடைய 30 வயதுடைய மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கெப் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வீரம்புகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.