டெங்கு காய்ச்சலினால் இளைஞன் மரணம்

219 0

டெங்கு காய்ச்சாலை் காரணமாக சிகிச்ச‍ை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.