இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஐவரையும் ஒழுக்காற்று குழு முன் பிரசன்னமாகுமாறு அறிவிப்பு!

350 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி கட்சியின் ஒழுக்காற்று சபையின் முன்னால் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா,லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன, விஜித் விஜயமுனி சொய்ஸா, ஏ.எச்.எம் பௌஸி ஆகிய ஐந்து உறுப்பினர்களையே ஒழுக்காற்று சபைக்கு முன்னால் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஐவரும் கட்சி யாப்புகளை மீறி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் 14 ஆம் திகதி கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.