கோட்டாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

206 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இடையிலான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு மன்றக் கல்லூரியில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.

அத்துடன், 30 அம்ச கோரிக்கைகளினையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்திருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த கோரிக்கைககள் உள்ளடங்களாக இன்று புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.