எந்ததொரு பிரதிபலனையும் எதிர்பார்த்து சேவையாற்றவில்லை- கோட்டாபய

229 0

எந்ததொரு பிரதிபலனையும் எதிர்பார்த்து மக்களுக்கு நாங்கள் சேவையாற்றவில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய மேலும் கூறியுள்ளதாவது, “ நாங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மாத்திரம் நோக்காக கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

நாட்டின் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கையை மேன்மையடைய செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.

அந்தவகையில் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சிறந்த சுபீட்சமான நாட்டை மக்களுக்காக ஏற்படுத்தி கொடுப்போம்.

இதேவேளை, க.பொ.த மற்றும் உயர்தர கல்வியை நிறைவு செய்யும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் சென்று  தனது கல்வியை தொடருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.