அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது – மைத்திரி

305 0

maithri-1அரசசார்பற்ற நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா ஆயுதப்படைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கான விருதுகளை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

‘சில தரப்புகள் எதையும் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றன. சில ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், அரசார்பற்ற நிறுவனங்கள், துரோப்படைகள் செய்வது போலவே, சிலவேளைகளில் இதுவும் தோன்றுகிறது.

அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நான் நிகழ்த்திய உரை சிலரால் திரிபுபடுத்தப்பட்டுள்ளது.சில ஊடகங்கள் தமக்கான சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் தவறாகப் பயன்படுத்துகின்றன.